வாசிதீரவே, காசு நல்குவீர்; மாசுஇல் மிழலையீர்; ஏசல் இல்லையே.
இறைவர் ஆயினீர்; மறைகொள் மிழலையீர்; கறைகொள் காசினை, முறைமை நல்குமே.
செய்யமேனியீர்; மெய்கொள் மிழலையீர்; பைகொள் அரவினீர்;உய்ய நல்குமே.
நீறு பூசினீர்; ஏறு அது ஏறினீர்; கூறு மிழலையீர்;பேறும் அருளுமே.
காமன்வேவ, ஓர் தூமக் கண்ணினீர்; நாம மிழலையீர்; சேமம் நல்குமே.
பிணிகொள் சடையினீர்; மணிகொள் மிடறினீர்; அணிகொள் மிழலையீர்; பணிகொண்டு அருளுமே.
மங்கை பங்கினீர்; துங்க மிழலையீர்; கங்கை முடியினீர்; சங்கை தவிர்மினே.
அரக்கன் நெரிதர, இரக்கம் எய்தினீர்; பரக்கும் மிழலையீர்; கரக்கை தவிர்மினே.
அயனும் மாலுமாய் முயலும் முடியினீர்; இயலும் மிழலையீர்; பயனும் அருளுமே.
பறிகொள் தலையினார், அறிவது அறிகிலார்; வெறிகொள் மிழலையீர்; பிரிவது அரியதே
.
காழிமா நகர் வாழி சம்பந்தன், வீழிமிழலை மேல், தாழும் மொழிகளே.