இரு நிலன்ஆய், தீஆகி, நீரும்ஆகி,
இயமானனாய், எறியும் காற்றும்ஆகி,
அரு நிலைய திங்கள்ஆய், ஞாயிறுஆகி,
ஆகாசம்ஆய், அட்டமூர்த்திஆகி,
பெரு நலமும் குற்றமும் பெண்ணும் ஆணும்
பிறர் உருவும் தம் உருவும் தாமேஆகி,
நெருநலைஆய், இன்றுஆகி, நாளைஆகி,
நிமிர்புன்சடை அடிகள் நின்றஆறே!
மண்ஆகி, விண்ஆகி, மலையும்ஆகி,
வயிரமும்ஆய், மாணிக்கம் தானேஆகி,
கண்ஆகி, கண்ணுக்கு ஓர் மணியும்ஆகி,
கலைஆகி, கலைஞானம் தானேஆகி,
பெண்ஆகி, பெண்ணுக்கு ஓர் ஆணும்ஆகி,
பிரளயத்துக்கு அப்பால் ஓர் அண்டம்ஆகி,
எண்ஆகி எண்ணுக்கு ஓர் எழுத்தும்ஆகி,
எழும்சுடர்ஆய் எம் அடிகள் நின்றஆறே!
கல்ஆகி, களறுஆகி, கானும்ஆகி,
காவிரிஆய், கால்ஆறுஆய், கழியும்ஆகி,
புல்ஆகி, புதல்ஆகி, பூடும்ஆகி,
புரம்ஆகி, புரம்மூன்றும் கெடுத்தான்ஆகி,
சொல்ஆகி, சொல்லுக்கு ஓர் பொருளும்ஆகி,
சொல்ஆகி, சொல்லுக்கு ஓர் பொருளும்ஆகி,
சுலாவுஆகி, சுலாவுக்கு ஓர் சூழல்ஆகி,
நெல்ஆகி, நிலன்ஆகி, நீரும்ஆகி,
நெடுஞ்சுடர்ஆய் நிமிர்ந்து, அடிகள் நின்றஆறே!
காற்றுஆகி, கார்முகில்ஆய், காலம்மூன்றுஆய்,
கனவுஆகி, நனவுஆகி, கங்குல்ஆகி,
கூற்றுஆகி, கூற்று உதைத்த கொல் களிறும்ஆகி,
குரைகடல்ஆய், குரைகடற்கு ஓர் கோமானும்(ம்)ஆய்,
நீற்றானாய், நீறு ஏற்ற மேனிஆகி,
நீள் விசும்புஆய், நீள் விசும்பின் உச்சிஆகி,
ஏற்றனாய், ஏறு ஊர்ந்த செல்வன்ஆகி,
எழும்சுடர்ஆய், எம் அடிகள் நின்றஆறே.
தீஆகி, நீர்ஆகி, திண்மைஆகி,
திசைஆகி, அத் திஐசக்கு ஓர் தெய்வம்ஆகி,
தாய்ஆகி, தந்தையாய், சார்வும்ஆகி,
தாரகையும் ஞாயிறும் தண்மதியும்ஆகி,
காய்ஆகி, பழம்ஆகி, பழத்தில் நின்ற
காய்ஆகி, பழம்ஆகி, பழத்தில் நின்ற
இரதங்கள் நுகர்வானும் தானேஆகி,
நீஆகி, நான்ஆகி, நேர்மைஆகி,
நெடுஞ்சுடர்ஆய், நிமிர்ந்து அடிகள் நின்றஆறே.
அங்கம்ஆய், ஆதிஆய், வேதம்ஆகி,
அருமறையோடு ஐம்பூதம் தானேஆகி,
பங்கம்ஆய், பலசொல்லும் தானேஆகி,
பால்மதியோடு ஆதிஆய், பான்மைஆகி,
கங்கைஆய், காவிரிஆய், கன்னிஆகி,
கடல்ஆகி, மலைஆகி, கழியும்ஆகி,
எங்கும்ஆய், ஏறு ஊர்ந்த செல்வன்ஆகி,
எழும்சுடர்ஆய், எம் அடிகள் நின்றஆறே.
மாதாபிதாஆகி, மக்கள்ஆகி,
மறிகடலும் மால் விசும்பும் தானேஆகி,
கோதாவிரிஆயி, குமரிஆகி,
கொல் புலித் தோல் ஆடைக் குழகன்ஆகி,
போதுஆய் மலர் கொண்டு போற்றி நின்று
புனைவார் பிறப்பு அறுக்கும் புனிதன்ஆகி,
ஆதானும் என நினைந்தார்க்கு அஃதேஆகி,
அழல்வண்ணவண்ணர்தாம் நின்றஆறே!
ஆஆகி, ஆவினில்ஐந்தும்ஆகி,
அறிவுஆகி, அழல்ஆகி, அவியும்ஆகி,
நாஆகி, நாவுக்கு ஓர் உரையும்ஆகி,
நாதனாய், வேதத்தின் உள்ளோன்ஆகி,
பூஆகி, பூவுக்கு ஓர் நாற்றம்ஆகி,
பூக்குளால் வாசம்ஆய் நின்றான்ஆகி,
தேஆகி, தேவர் முதலும்ஆகி,
செழுஞ்சுடர்ஆய், சென்று அடிகள் நின்றஆறே!
நீர்ஆகி, நீள் அகலம் தானேஆகி,
நிழல்ஆகி, நீள் விசும்பின் உச்சிஆகி,
பேர்ஆகி, பேருக்கு ஓர் பெருமைஆகி,
பெரு மதில்கள்மூன்றினையும் எய்தான்ஆகி,
ஆரேனும் தன் அடைந்தாரதம்மைஎல்லாம்
ஆட்கொள்ள வல்ல எம் ஈசனார்தாம்
பார்ஆகி, பண்ஆகி, பாடல்ஆகி,
பரஞ்சுடர்ஆய், சென்று அடிகள் நின்றஆறே!
மால்ஆகி, நான்முகனாய், மா பூதம்(ம்)ஆய்,
மருக்கம்ஆய், அருக்கம்ஆய், மகிழ்வும்ஆகி,
பால்ஆகி, எண்திசைக்கும் எல்லைஆகி,
பரப்புஆகி, பரலோகம் தானேஆகி,
பூலோக புவலோக சுவலோகம்(ம்)ஆய்,
பூதங்கள்ஆய், புராணன் தானேஆகி,
ஏலாதனஎலாம் ஏல்விப்பானாய்,
எழும்சுடர்ஆய், எம் அடிகள் நின்றஆறே!